சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்பப்பெற முடியும் என உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.ராஜினாமாவை திரும்பப்பெற்றால் அவரே முதல்வராக நீடிக்கலாம் என்றும் நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா பதவியை கடந்த 5ஆம் தேதி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கும் அவர் அனுப்பி வைத்தார்.
-------------------------
இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய அவர் சசிகலா தரப்பு தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக அவர் கூறினார். தமிழக அரசியலில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் காபந்து முதல்வராக நீடிக்கும ஓ.பன்னீர்செல்வம் தனத ராஜினாமாவை திரும்பப்பெற முடியும் என உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.
---------------------
---------------------
No comments:
Post a Comment